1999 ஆம் ஆண்டு கார்கில் போரில் இந்திய ஆயுதப் படைகளின் வெற்றியை நினைவு கூரும் வகையில் இது அனுசரிக்கப்படுகிறது.
இது விஜய் நடவடிக்கையின் 26வது ஆண்டு நிறைவைக் குறிக்கிறது.
இந்த நடவடிக்கையின் போது, பாகிஸ்தான் வீரர்கள் கார்கிலில் முக்கியப் பகுதிகளை ஆக்கிரமித்ததையடுத்து இந்தியா அப்பிரதேசத்தை மீட்டெடுத்தது.
இமயமலையில் கடுமையான வானிலை மற்றும் மோசமான நிலப்பரப்பில் போராடிய வீரர்களின் துணிச்சல் மற்றும் தியாகத்திற்கு கௌரவம் அளிக்கும் வகையில் கார்கில் விஜய் திவாஸ் நாடு முழுவதும் அனுசரிக்கப்படுகிறது.