காலனித்துவ காலத்தைச் சேர்ந்த கட்டமைப்புகள் - கொல்கத்தா
January 12 , 2020 2437 days 1109 0
கொல்கத்தாவில் உள்ள பழமையான நாணயக் கட்டிடம், மெட்கால்ஃப் அரண்மனை, பெல்வெடெர் அரண்மனை மற்றும் விக்டோரியா நினைவு மண்டபம் ஆகியவற்றை பிரதமர் நாட்டிற்கு அர்ப்பணித்தார்.
இந்தக் கட்டிடங்கள் மத்தியக் கலாச்சாரத் துறை அமைச்சகத்தினால் புதுப்பிக்கப் பட்டன.
இந்திய ரிசர்வ் வங்கியானது 1937 ஆம் ஆண்டு வரை நாணயக் கட்டடத்தில் இயங்கியது. அதன் பின்னர் இந்திய ரிசர்வ் வங்கியானது வேறு இடத்திற்கு மாற்றப் பட்டது.
இந்தக் கட்டிடத்திற்கு இந்தியாவின் தலைமை ஆளுநரான மெட்கால்ஃப் என்பவரின் நினைவாக இப்பெயர் இடப்பட்டுள்ளது.
பெல்வெடெர் அரண்மனையானது மீர் ஜாபரின் அரண்மனையாக விளங்கியது.