"கால்நடை மருத்துவத்தில் வளர்ந்து வரும் போக்குகள், தொழில்நுட்பங்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவு: சவால்கள் மற்றும் வாய்ப்புகள்" என்ற தலைப்பில் ஒரு தேசிய மாநாடு சென்னையில் தொடங்கியது.
கால்நடை மருத்துவ நோயறிதல், விலங்கு சுகாதாரப் பராமரிப்பு மற்றும் துல்லிய வேளாண்மை ஆகியவற்றில் செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் நவீன தொழில் நுட்பங்களைப் பயன்படுத்துவதை நன்கு ஊக்குவிப்பதை இந்த மாநாடு நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்த நிகழ்வை இந்தியக் கால்நடை மருத்துவச் சங்கம் (ISVM) மற்றும் மெட்ராஸ் கால்நடை மருத்துவக் கல்லூரி ஏற்பாடு செய்துள்ளன.