பணியின் போது தங்கள் உயிரைத் தியாகம் செய்த காவல்துறையினரைக் கௌரவிப்பதற்காக இது முதன்முதலில் 1960 ஆம் ஆண்டில் அனுசரிக்கப்பட்டது.
1959 ஆம் ஆண்டு அக்டோபர் 21 ஆம் தேதியன்று லடாக்கின் ஹாட் ஸ்பிரிங்ஸ் பகுதியில் சீனப் படையினரின் தாக்குதலில் கொல்லப்பட்ட பத்து இந்திய காவல் துறையினரின் நினைவாக இந்த நாள் அனுசரிக்கப்படுகிறது.
உள்நாட்டு அமைதி மற்றும் ஒழுங்கைப் பேணுவதில் காவல் படைகளின் தைரியம், அர்ப்பணிப்பு மற்றும் சேவையை இந்த நாள் எடுத்துரைக்கிறது.