2018 ஆம் ஆண்டிற்கான காவல் நிலையங்களின் தரவரிசையை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
இராஜஸ்தானின் பிகானிர் மாவட்டத்தில் உள்ள கலு காவல் நிலையம் நாட்டின் சிறந்த காவல் நிலையமாக தர வரிசைப் படுத்தப்பட்டுள்ளது.
இத்தரவரிசையில் அந்தமான் நிக்கோபாரில் உள்ள கேம்பெல் வளைகுடா காவல் நிலையம் இரண்டாவது இடத்தில் தரவரிசைப் படுத்தப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டின் தேனியில் உள்ள பெரியகுளம் காவல் நிலையம் 8-வது இடத்தில் உள்ளது.
2017 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டின் கோயம்புத்தூரில் உள்ள ஆர்எஸ் புரம் காவல் நிலையம் சிறந்த காவல் நிலையமாக தரவரிசைப்படுத்தப் பட்டிருந்தது. இதற்கு அடுத்த இடங்களில் ஹைதராபாத்தின் பஞ்சகுட்டா காவல் நிலையமும் லக்னோவின் குடம்பா காவல் நிலையமும் இருந்தன.