நுண் நெகிழிகள் போன்ற மாசுபடுத்திகள் காவிரி ஆற்றில் வாழும் மீன்களில் எலும்பு வளர்ச்சிக் குறைபாடுகள் போன்ற வளர்ச்சிக் குறைபாடுகளை ஏற்படுத்தக் கூடும் என்று ஒரு புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது.
சுற்றுச்சூழல் நச்சுயியல் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்ற இதழில் இந்த ஆய்வு வெளியிடப் பட்டுள்ளது.
பெங்களூரு நகரில் உள்ள இந்திய அறிவியல் கழகத்தினைச் சேர்ந்த உபேந்திரா நோங்தோம்பா இந்த ஆய்வினைத் தலைமையேற்று மேற்கொண்டார்.
நோங்தோம்பாவின் ஆய்வகத்தில் மாணவராக இருந்த முனைவர் ஆய்வுப் பட்டப் படிப்பு மாணவரான அப்பாஸ் டோபா அனிபோவோஷே என்பவரே இந்த ஆய்வின் முதல் ஆசிரியர் ஆவார்.