TNPSC Thervupettagam

காவிரி நீர்ப் பிரச்சினை குறித்த புதிய தகவல்

August 1 , 2026 4 days 56 0
  • கர்நாடகா தமிழ்நாட்டிற்குக் காவிரி நீரைத் திறந்துவிட வேண்டும் என்ற காவிரி நீர் ஒழுங்குமுறைக் குழுவின் (CWRC) உத்தரவைக் காவிரி நீர் மேலாண்மை ஆணையம் (CWMA) உறுதி செய்துள்ளது.
  • 2026 ஆம் ஆண்டு ஜூலை 29 முதல் 15 நாட்களுக்குத் தினமும் 3,500 கன அடி (cusecs) தண்ணீரைத் திறந்துவிட கர்நாடகாவிற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
  • வறட்சி, அணைகளில் நீர்வரத்து குறைவு மற்றும் குடிநீர் தேவைகள் தொடர்பான கவலைகளைக் குறிப்பிட்டு, கர்நாடகா இந்த உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்தது.
  • காவிரி டெல்டாவில் நிலவும் கடும் தண்ணீர் பற்றாக்குறையைக் சுட்டிக்காட்டி, நாளொன்றுக்கு 7,000 கன அடி தண்ணீரைத் திறக்க வேண்டும் எனத் தமிழ்நாடு கோரிக்கை விடுத்தது.
  • கர்நாடகாவின் அணைகளுக்கு நீர்வரத்து மேம்பட்டுள்ளதால், அதன் குடிநீர் தேவைகளைப் பாதிக்காமல் நீரைத் திறந்துவிட முடியும் என CWMA தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்