காஷ்மீர் பள்ளத்தாக்கில் உள்ள ஆப்பிள் விவசாயிகள் முன் எப்பொழுதும் இல்லாத வகையில் தற்பொழுது இழப்பைச் சந்தித்து வருகின்றனர்.
விவசாயிகளிடமிருந்து நேரடியாக ஆப்பிள்களை வாங்குவதாகவும் அதற்கான பணமானது நேரடியாக அவர்களின் வங்கிக் கணக்குகளுக்குச் செலுத்தப்படும் என்றும் மத்திய அரசு தற்பொழுது அறிவித்துள்ளது.
ஒரு சிறப்புச் சந்தை இடையீட்டுத் திட்டத்தின் (MIS - Market Intervention Scheme) கீழ், இந்திய தேசிய வேளாண் கூட்டுறவு சந்தைப்படுத்தல் கூட்டமைப்பு நிறுவனமானது விவசாயிகளிடமிருந்து ஆப்பிள்களைக் கொள்முதல் செய்யும்.
அரசாங்கத்தால் நடைமுறைப்படுத்தப்பட்ட பாதுகாப்புக் கட்டுப்பாடுகள் காரணமாக விவசாயிகள் தங்கள் விளைபொருட்களைச் சந்தைகளுக்குக் கொண்டு செல்ல முடியவில்லை.
இதுபற்றி
MIS ஆனது வேளாண்மை மற்றும் கூட்டுறவுத் துறையால் செயல்படுத்தப் படுகின்றது.
குறைந்தபட்ச ஆதரவு விலை (Minimum Support Price - MSP) “நிர்ணயிக்கப்படாத” அனைத்து விவசாய மற்றும் தோட்டக் கலைப் பொருட்களும் பொதுவாக இயற்கையால் அழிந்து போகக் கூடிய பொருள்களும் MISன் கீழ் அடங்கும்.