TNPSC Thervupettagam

காஷ்மீர் ஆப்பிள்கள் - சந்தை இடையீட்டுத் திட்டம்

September 12 , 2019 2115 days 638 0
  • காஷ்மீர் பள்ளத்தாக்கில் உள்ள ஆப்பிள் விவசாயிகள் முன் எப்பொழுதும் இல்லாத வகையில் தற்பொழுது இழப்பைச் சந்தித்து வருகின்றனர்.
  • விவசாயிகளிடமிருந்து நேரடியாக ஆப்பிள்களை வாங்குவதாகவும் அதற்கான பணமானது நேரடியாக அவர்களின் வங்கிக் கணக்குகளுக்குச் செலுத்தப்படும் என்றும் மத்திய அரசு தற்பொழுது அறிவித்துள்ளது.
  • ஒரு சிறப்புச் சந்தை இடையீட்டுத் திட்டத்தின் (MIS - Market Intervention Scheme) கீழ், இந்திய தேசிய வேளாண் கூட்டுறவு சந்தைப்படுத்தல் கூட்டமைப்பு நிறுவனமானது விவசாயிகளிடமிருந்து ஆப்பிள்களைக் கொள்முதல் செய்யும்.
  • அரசாங்கத்தால் நடைமுறைப்படுத்தப்பட்ட பாதுகாப்புக் கட்டுப்பாடுகள் காரணமாக விவசாயிகள் தங்கள் விளைபொருட்களைச் சந்தைகளுக்குக் கொண்டு செல்ல முடியவில்லை.
இதுபற்றி
  • MIS ஆனது வேளாண்மை மற்றும் கூட்டுறவுத் துறையால் செயல்படுத்தப் படுகின்றது.
  • குறைந்தபட்ச ஆதரவு விலை (Minimum Support Price - MSP) “நிர்ணயிக்கப்படாத” அனைத்து விவசாய மற்றும் தோட்டக் கலைப் பொருட்களும் பொதுவாக இயற்கையால் அழிந்து போகக் கூடிய பொருள்களும் MISன் கீழ் அடங்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்