ஹைதராபாத்தில் உள்ள தேசிய ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் நிறுவனம் நீடித்த வாழ்வாதாரம் மற்றும் கால நிலைக்கேற்றவாறுத் தகவமைத்துக் கொள்ளுதல் (SLACC - Sustainable Livelihoods and Adaptation to Climate Change) என்ற ஒரு பயிற்சித் திட்டத்தைத் தொடங்கியுள்ளது.
இந்தத் திட்டம் கிராமப்புற விவசாயத்தை நம்பி இருக்கும் ஏழைக் குடும்பங்கள் தற்சமயம் நிகழும் காலநிலை மாற்றத்திற்கு ஏற்றவாறு தங்களைத் தகவமைத்துக் கொள்வதற்கு உதவுதல் மற்றும் அவர்களின் நீடித்த வாழ்வாதாரத்திற்கு உதவுதல் ஆகியவற்றை நோக்கங்களாகக் கொண்டுள்ளது.
இது தேசிய ஊரக வாழ்வாதாரத் திட்டத்தின் கீழ் தொடங்கப்பட்டுள்ளது.
மத்தியப் பிரதேசம் மற்றும் பீகார் மாநிலங்களில் வறட்சி மற்றும் வெள்ள அபாயம் உள்ள 638 கிராமங்களில் இத்திட்டம் சோதனை அடிப்படையில் செயல்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றது.