TNPSC Thervupettagam

கிராமப்புற சிறப்பு அதிகாரிகளுக்கான பதவிக்கால நீட்டிப்பு

October 20 , 2025 16 hrs 0 min 7 0
  • தமிழ்நாடு அரசானது, 1994 ஆம் ஆண்டு தமிழ்நாடு பஞ்சாயத்து சட்டத்தினைத் திருத்துவதற்கான மசோதாவை அறிமுகப்படுத்தியுள்ளது.
  • இந்த மசோதா கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள சிறப்பு அதிகாரிகளின் பதவிக் காலத்தை 2026 ஆம் ஆண்டு ஜனவரி 05 ஆம் தேதி வரை நீட்டிக்க முயல்கிறது.
  • சிறப்பு அதிகாரிகளின் தற்போதைய பதவிக் காலம் ஆனது ஏற்கனவே 2025 ஆம் ஆண்டு ஜனவரி 05 ஆம் தேதி வரையில் ஓர் அவசரச் சட்டத்தின் மூலம் நீட்டிக்கப் பட்டது.
  • இந்த நீட்டிப்பு 28 மாவட்டங்களில் உள்ள 9,624 கிராமப் பஞ்சாயத்துகள், 314 பஞ்சாயத்து ஒன்றியங்கள் மற்றும் 28 மாவட்டப் பஞ்சாயத்துகளுக்குப் பொருந்தும்.
  • தொகுதி மேம்பாட்டு அதிகாரிகள் (கிராமப் பஞ்சாயத்துகள்) கிராமப் பஞ்சாயத்துகளுக்கான சிறப்பு அதிகாரிகளாக செயல்படுகின்றனர்.
  • உதவி இயக்குநர்கள் (பஞ்சாயத்துகள் அல்லது தணிக்கை) பஞ்சாயத்து ஒன்றியங்களுக்கான சிறப்பு அதிகாரிகளாக நியமிக்கப்படுகிறார்கள்.
  • கூடுதல் இயக்குநர்கள், கூடுதல் ஆட்சியர்கள், இணை இயக்குநர்கள் அல்லது திட்ட இயக்குநர்கள் மாவட்டப் பஞ்சாயத்துகளுக்கான சிறப்பு அதிகாரிகளாக நியமிக்கப் படுகிறார்கள்.
  • 2024 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 12 ஆம் தேதி முதல், திருவண்ணாமலை, காரைக்குடி, புதுக்கோட்டை மற்றும் நாமக்கல் நகராட்சி மன்றங்கள் மாநகராட்சிக் கழகங்களாக மாற்றப்பட்டன.
  • கிராமப் பஞ்சாயத்துகளை இந்த மாநகராட்சிகளுடன் இணைப்பது பாதிக்கப்பட்டப் பஞ்சாயத்து ஒன்றியங்கள் மற்றும் மாவட்டங்களில் பஞ்சாயத்துகளின் எண்ணிக்கையைக் குறைக்கிறது.
  • பஞ்சாயத்துகளின் குறைப்பு ஒட்டு மொத்த தொகுதி மறுசீரமைப்புச் செயல்பாட்டில் பிரதிபலிக்கும்.
  • தொகுதி மறுசீரமைப்பு செயல்முறை முடிந்த பின்னரே கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல்களை நடத்த முடியும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்