நபார்டு ஒரு தொழில்முனைவோர் மேம்பாட்டுத் திட்டத்தைத் தொடங்கியுள்ளது.
இது மத்திய திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவு அமைச்சகத்தின் (MSDE) கீழ் தேசிய திறன் மேம்பாட்டுக் கழகத்தால் (NSDC) செயல்படுத்தப்பட்டது.
இது தொழில் மேம்பாட்டு நிறுவனம் மூலம் செயல்படுத்தப்படுகிறது.
இது கிராமப்புற இந்தியாவின் தொழில்முனைவுத் திறனை வெளிக்கொணர்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
மேலும், விரிவாக்கக்கூடிய விநியோக அமைப்பு மூலம் 3 ஆண்டுகளில் சுமார் 4,000 தொழில்முனைவோரை உருவாக்கி, உள்ளூர் வாய்ப்புகளை நிலையான கிராமப்புற வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்புகளுக்கான உந்துசக்திகளாக மாற்றுவதையும் இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
இது டிஜிட்டல் தளங்கள், சமூக ஊடக ஈடுபாடு, சமூகத் தொடர்பு மற்றும் களப்பணி ஆகியவற்றை ஒருங்கிணைத்து, டிஜிட்டல்-சார்ந்த, கலப்பின விநியோக மாதிரியைப் பயன்படுத்துகிறது.