கிருஷ்ணதேவராயரின் இறப்பிற்கான முதலாவது கல்வெட்டு ஆதாரம்
March 4 , 2021
1555 days
887
- இந்தியத் தொல்லியல் ஆய்வு மையத்தைச் சேர்ந்த அதிகாரிகள் கிருஷ்ண தேவராய நாயக்கரின் இறப்பிற்கான முதலாவது கல்வெட்டு ஆதாரத்தைக் கண்டறிந்துள்ளனர்.
- இவர் துளுவ வம்சத்தைச் சேர்ந்த மூன்றாவது ஆட்சியாளர் ஆவார்.
- இவர் 1509-1529 ஆகிய ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலகட்டத்தில் விஜயநகரப் பேரரசின் அரசராக விளங்கினார்.
- இந்தக் கல்வெட்டானது தும்கூர் மாவட்டத்தில் ஹோனன்னஹல்லியில் உள்ள கோபால கிருஷ்ண ஆலயத்திற்கு அருகில் கண்டெக்கப் பட்டுள்ளது.
- இந்தக் கல்வெட்டின்படி, 1529 ஆம் ஆண்டு அக்டோபர் 17 அன்று கிருஷ்ண தேவராயர் இறந்தார்.
- தெற்கிலிருந்து ஆட்சி செய்த மிகவும் புகழ்பெற்ற ஆட்சியாளர்களில் அவர் ஒருவர் ஆவார்.

Post Views:
887