குகி-சோ கிளர்ச்சிக் குழுக்கள் ஆனது, 2025 ஆம் ஆண்டு செப்டம்பர் 02 ஆம் தேதியன்று மணிப்பூர் அரசு மற்றும் உள்துறை அமைச்சகத்துடன் கிளர்ச்சி செயல்பாடுகளை நிறுத்தி வைக்கும் (SoO) ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.
எதிர்காலப் பேச்சுவார்த்தைகள், குகி-சோ பகுதிகளுக்கான சட்டமன்றத்துடன் கூடிய ஒன்றியப் பிரதேசத்திற்கான கோரிக்கையில் கவனம் செலுத்தும்.
2023 ஆம் ஆண்டு மே மாதத்தில் நடைபெற்ற இன வன்முறைக்குப் பிறகு, இந்தக் கோரிக்கை உள்ளூர் சுயாட்சி என்ற கோரிக்கையிலிருந்து ஒன்றியப் பிரதேசத்திற்கான கோரிக்கையாக மாறியது.
குடியரசுத் தலைவர் ஆட்சி விதிக்கப்படுவதற்கு முன்பு, 2024 ஆம் ஆண்டு பிப்ரவரி 29 ஆம் தேதியன்று மணிப்பூர் அரசு இந்த ஒப்பந்தத்தில் இருந்து விலகியது.