மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத் துறை அமைச்சகமானது பின்வரும் தரவுகளை எடுத்துக் காட்டியுள்ளது.
நாட்டின் 50%ற்கும் மேற்பட்ட மக்கள் தொகையானது 15-49 கருவுறு வயது வரம்பிற்குள் உள்ளது.
இந்தியாவின் தோராய பிறப்பு விகிதமானது 21.8(2011)லிருந்து 20(2018) ஆகக் குறைந்துள்ளது.
மொத்தப் பிறப்பு விகிதமானது 2.4(2011)லிருந்து 2.2(2018) ஆகக் குறைந்துள்ளது.
இளம் பருவப் பிறப்பு விகிதமானது 16லிருந்து 7.9 ஆக, பாதியாகக் குறைந்துள்ளது.
தேசியக் குடும்பக் கட்டுப்பாட்டுத் திட்டமானது “அந்த்தாரா” என்ற திட்டத்தின் கீழ் பொதுச் சுகாதார அமைப்பில் உட்செலுத்தக்கூடிய கருத்தடை முறையை அறிமுகப்படுத்தியுள்ளது.