கர்நாடக மாநிலத்தின் ஹாவேரி மாவட்டத்தில் உள்ள குட்டலாவில் உள்ள சந்திரசேகர கோயிலுக்கு அருகில் ஒரு சிற்பக் கல்வெட்டு கண்டறியப்பட்டுள்ளது.
உள்ளூர் பகுதியில் வறட்சி காரணமாக 6,307 பேர் உயிரிழந்ததை இது ஆவணப்படுத்தி உள்ளது.
இதனால், இந்தியாவில் இயற்கைப் பேரழிவால் ஏற்பட்ட மனிதப் பேரழிவின் முதல் வரலாற்றுப் பதிவாக இது அமைந்தது.
இது இந்திய வரலாற்றில் கல்வெட்டு ரீதியாக ஆவணப்படுத்தப் பட்ட மிகவும் பெரிய அளவிலான இயற்கைப் பேரழிவுகளில் ஒன்றாகவும் இது குறிக்கப் படுகிறது.
சாகா 1461, விகாரி, பத்ரபாதா சூ.5 தேதியிட்ட இந்தக் கல்வெட்டு ஆனது கி.பி. 1539 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 18 ஆம் தேதியினை ஒத்திருக்கிறது.
இது கன்னட மொழி மற்றும் எழுத்துக்களில் உள்ளது.
இங்கு இறந்தவர்களின் உடல்கள் குட்டவாலாலாவைச் சேர்ந்த நானிதேவா ஒடேயா என்பவரின் மகன் மருளைய்யா ஒடேயாவா என்பவரால் அடக்கம் செய்யப்பட்டதாகக் குறிப்பிடுகிறது.
அதன் ஆட்சியாளர் திம்மரச சுவாமிக்கு மரியாதை செலுத்திப் புண்ணியம் ஈட்டச் செய்வதற்காக உயிரிழந்தவர்களை அவர் கூடைகளில் புதைத்தார்.