TNPSC Thervupettagam

குப்பைகள் அகற்றம் @ சியாச்சின்

September 28 , 2019 2137 days 872 0
  • 2018 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் சியாச்சின் பனிப் பாறையில் இருந்து கிட்டத்தட்ட 130 டன் எடையுள்ள கழிவுகளை இந்திய இராணுவம் அப்புறப்படுத்தியுள்ளது.
  • பனிப் பாறை மீதான கழிவு மேலாண்மை குறித்த 2018 ஆம் ஆண்டு கருத்துக் குறிப்பின் அடிப்படையில், பனிப் பாறைகளிலிருந்து கழிவுகளைக் கீழே கொண்டு வருவதை துருப்புக்களுக்கான நிலையான செயல்பாட்டு நடைமுறையின் (Standard Operating Procedure - SOP) ஒரு பகுதியாக இந்திய இராணுவம் இணைத்துள்ளது.
  • சியாச்சின் பனிப் பாறையில் ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக 236 டன் கழிவுகள் உருவாகின்றன.
இதுபற்றி
  • 1984 ஆம் ஆண்டில் ‘மேக்தூத் நடவடிக்கையின்’ கீழ் இந்த உயர்ந்த பனிப் பாறையை இந்தியா கைப்பற்றியது.
  • பனா சோதனைச் சாவடியானது இந்தப் பனிப் பாறையின் மீது ஏறத்தாழ 22,000 அடி உயரத்தில் அமைந்துள்ள உயரமான சோதனைச் சாவடியாகும்.
  • 18,000-19,000 அடி உயரத்தில், இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளின் சோதனைச் சாவடிகள் ஒன்றுக்கொன்று நேர் – எதிராக அமைந்துள்ளன.
  • 22,000 அடிக்கு அப்பால் இந்திய ராணுவம் மட்டுமே அங்கு உள்ளது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்