சர்ச்சைக்குரிய குரில் தீவுகளில் உள்ள இடுருப் (Iturup) தீவிற்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் பயணம் மேற்கொண்ட நிலையில் இதற்கு ஜப்பான் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.
குரில் தீவுகள் என்பது வடக்கு பசிபிக் பெருங்கடலில் சுமார் 1,200 கி.மீ தொலைவிற்கு பரவியுள்ள 56 தீவுகளைக் கொண்ட ஒரு எரிமலை தீவுக்கூட்டமாகும்.
வடக்கு பிராந்தியங்கள் என்று அழைக்கப்படும் இடுருப், குனாஷிர், ஷிகோடன் மற்றும் ஹபோமாய் ஆகிய நான்கு தீவுகளுக்கு ஜப்பான் உரிமை கோருகிறது, அதே நேரத்தில் ரஷ்யா அவற்றை சக்காலின் (Sakhalin) பிராந்தியத்தின் ஒரு பகுதியாக நிர்வகிக்கிறது.
இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு ரஷ்யா இத்தீவுகளின் கட்டுப்பாட்டை எடுத்துக் கொண்ட நேரத்தில் அதே சமயம் ஜப்பான் தொடர்ந்து அந்த நான்கு தீவுகளின் மீது இறையாண்மை கோரி வருகிறது.
ரஷ்யா யால்டா ஒப்பந்தம் மற்றும் போட்ஸ்டாம் பிரகடனம் (1945) போன்ற போருக்குப் பிந்தைய ஒப்பந்தங்களை மேற்கோள் காட்டுகிறது, அதே நேரத்தில் ஜப்பான் ஷிமோடா உடன்படிக்கை (1855) மற்றும் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் உடன்படிக்கை (1875) உள்ளிட்ட முந்தைய ஒப்பந்தங்களைக் குறிப்பிடுகிறது.
இந்த சர்ச்சையானது, இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு ரஷ்யா-ஜப்பான் இடையே முறையான அமைதி ஒப்பந்தம் கையெழுத்தாவதைத் தடுத்துள்ளது.