இந்தியாவில் உள்ள பட்டியலின சாதியினைச் சேர்ந்த தொழில்முனைவோர்களுக்குச் சொந்தமான குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் எண்ணிக்கையில் மகாராஷ்டிரா முதலிடத்தினைப் பெற்றுள்ளது.
மத்திய குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் அமைச்சகத்தின் மேம்பாட்டு ஆணையர் அலுவலகம் அளித்த தரவுகளில் இந்த தகவலானது கூறப்பட்டுள்ளது.
தமிழ்நாடு மற்றும் ராஜஸ்தான் ஆகியவை முறையே 2வது மற்றும் 3வது இடங்களைப் பெற்றுள்ளன.
தேசிய அளவில் பட்டியலினச் சாதியைச் சேர்ந்த தொழில்முனைவோருக்குச் சொந்தமான குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் ஒட்டு மொத்த விகிதம் 6% ஆகும்.