TNPSC Thervupettagam

குறுவை சாகுபடி பரவல் 2025

June 10 , 2025 3 days 31 0
  • தமிழ்நாடு அரசு ஆனது தற்போதைய குறுவை சாகுபடி பருவத்தில், டெல்டா பகுதியில் 5 லட்சம் ஏக்கருக்கும் அதிகமான பரப்பளவில் குறுவை சாகுபடி செய்வதற்கான உயர் இலக்கினை நிர்ணயித்துள்ளது.
  • கடந்த ஆண்டு, இந்த சாகுபடி அளவு சுமார் 3.88 லட்சம் ஏக்கர்களாக இருந்தது என்ற நிலையில் இது 2023-24 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப் பட்டதை விட சுமார் 1.7 லட்சம் ஏக்கர் குறைவாகும்.
  • தற்போதைய நிலைமை மிகச் சிறப்பாக இருப்பதால், ஜூன் 12 ஆம் தேதி மேட்டூர் அணையைத் திறக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
  • இந்த முறை, குறுவை சாகுபடிப் பரப்பளவில் சாதனையாக 5.6 லட்சம் ஏக்கர் வரை இருக்கலாம்.
  • டெல்டா பகுதிகளில் உள்ள விவசாயிகளுக்கு 58 கோடி ரூபாய் ஒதுக்கீட்டில் சிறப்பு குறுவை சாகுபடி உதவித்தொகை தொகுப்பைத் தொடரவும் அரசாங்கம் முடிவு செய்து உள்ளது.
  • இந்தத் திட்டத்தில் இயந்திரமயமாக்கப்பட்ட நெல் நடவு, சான்றளிக்கப்பட்டத் தரமான விதைகள், உயிர் உரங்கள் மற்றும் நுண்ணூட்டச் சத்து கலவைகளுக்கு மானியங்கள் வழங்கப்படுகின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்