தமிழ்நாடு அரசு ஆனது தற்போதைய குறுவை சாகுபடி பருவத்தில், டெல்டா பகுதியில் 5 லட்சம் ஏக்கருக்கும் அதிகமான பரப்பளவில் குறுவை சாகுபடி செய்வதற்கான உயர் இலக்கினை நிர்ணயித்துள்ளது.
கடந்த ஆண்டு, இந்த சாகுபடி அளவு சுமார் 3.88 லட்சம் ஏக்கர்களாக இருந்தது என்ற நிலையில் இது 2023-24 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப் பட்டதை விட சுமார் 1.7 லட்சம் ஏக்கர் குறைவாகும்.
தற்போதைய நிலைமை மிகச் சிறப்பாக இருப்பதால், ஜூன் 12 ஆம் தேதி மேட்டூர் அணையைத் திறக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
இந்த முறை, குறுவை சாகுபடிப் பரப்பளவில் சாதனையாக 5.6 லட்சம் ஏக்கர் வரை இருக்கலாம்.
டெல்டா பகுதிகளில் உள்ள விவசாயிகளுக்கு 58 கோடி ரூபாய் ஒதுக்கீட்டில் சிறப்பு குறுவை சாகுபடி உதவித்தொகை தொகுப்பைத் தொடரவும் அரசாங்கம் முடிவு செய்து உள்ளது.
இந்தத் திட்டத்தில் இயந்திரமயமாக்கப்பட்ட நெல் நடவு, சான்றளிக்கப்பட்டத் தரமான விதைகள், உயிர் உரங்கள் மற்றும் நுண்ணூட்டச் சத்து கலவைகளுக்கு மானியங்கள் வழங்கப்படுகின்றன.