உள்ளாட்சி அமைப்புகளின் அனைத்து மட்ட அலுவலகங்களிலும் குறைதீர்ப்பாளரின் இருப்பு பிரதானமாகக் காட்டப் படுவதை நன்கு உறுதி செய்யுமாறு சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை அமர்வு ஆனது நகராட்சி நிர்வாகம் மற்றும் நீர் விநியோகத் துறை செயலாளருக்கு உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள் குறைதீர்ப்புச் சட்டம் 2014 ஆம் ஆண்டில் இயற்றப் பட்டது.
இந்தச் சட்டமானது, உள்ளாட்சி அமைப்புகளின் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு எதிரான புகார்களைத் தீர்ப்பதை ஒரு முக்கிய நோக்கமாகக் கொண்டுள்ளது.
உள்ளாட்சி அமைப்புகளின் செயல்பாட்டில் வெளிப்படைத்தன்மையை மிகவும் உறுதி செய்வதே இதன் நோக்கமாகும்.
உள்ளாட்சி அமைப்புகளின் அரசு ஊழியர்கள் மீதான ஊழல், முறைகேடுகள் அல்லது தவறான நிர்வாகம் தொடர்பான குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்துவதற்கு குறைதீர்ப்பாளர் அதிகாரம் பெற்றவர் ஆவார்.
எந்தவொரு அரசு ஊழியரும் ஊழல், பாரபட்சம், வாரிசுச் சலுகை அல்லது பதவி ஆதாயத்திற்காக தனது பதவியை துஷ்பிரயோகம் செய்தால், குறைதீர்ப்பாளர் அந்தப் புகாரை ஏற்றுக் கொண்டு சட்டத்தின் கீழ் வழங்கப் பட்டுள்ள படி அது குறித்து முடிவு செய்வார்.