குறைந்த செலவிலான துத்தநாக-காற்று மின்கலத் தொழில்நுட்பம்
July 27 , 2026 15 hrs 0 min 36 0
ஆற்றல் சேமிப்பு மற்றும் மின்சார வாகனங்களுக்காக குறைந்த செலவிலான துத்தநாக-காற்று மின்கலத் தொழில்நுட்பங்களை (zinc-air battery) இந்திய அறிவியலாளர்கள் உருவாக்கியுள்ளனர்.
துத்தநாக-காற்று மின்கலங்கள் துத்தநாகத்தை நேர்மின்வாயாகவும், காற்றில் உள்ள ஆக்ஸிஜனை எதிர்மின்வாய் வினைபொருளாகவும் பயன்படுத்துகின்றன, இது அதிக ஆற்றல் அடர்த்தியை வழங்குகிறது.
சாஸ்த்ரா நிகர்நிலைப் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் ஒரு நிலையான நானோ திரவ மின்பகுளி மற்றும் குறைந்த செலவிலான தாமிரம் கலந்த மாங்கனீசு டை ஆக்சைடு வினையூக்கியை உருவாக்கியுள்ளனர்.
சென்னை இந்தியத் தொழில்நுட்பக் கழகம் (IIT) இயந்திரத்தனமாக மின்னேற்றம் செய்யக்கூடிய துத்தநாக-காற்று மின்கலங்களை உருவாக்கி வருகிறது, மேலும் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனத்துடன் இணைந்து 1 கிலோவாட்-மணிநேரம் (kWh) மின்னேற்றம் செய்யக்கூடிய ஒரு முன்மாதிரியை உருவாக்கி வருகிறது.
துத்தநாக-காற்று மின்கலங்கள் நீர் சார்ந்த மின்பகுளிகளைப் பயன்படுத்துகின்றன, இதனால் அவை பல லித்தியம்-அயனி மின்கலங்களை விட குறைவான எரியும் தன்மையைக் கொண்டுள்ளன.