TNPSC Thervupettagam

குளிர் கூரை பூச்சுக்கான நிலையான செயல்பாட்டு நடைமுறை

June 7 , 2026 10 days 115 0
  • 2026 ஆம் ஆண்டு ஜூன் 5 ஆம் தேதி உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, குளிர் கூரை பூச்சு பயன்பாட்டிற்கான இந்தியாவின் முதல் மாநில அளவிலான நிலையான செயல்பாட்டு நடைமுறையை (SOP) தமிழ்நாடு அறிமுகப்படுத்தியது.
  • வீடுகள், பள்ளிகள் மற்றும் பொதுக் கட்டடங்களில் குளிர் கூரை பூச்சுகளைப் பயன்படுத்துவதற்கான 12 கட்ட நிலையான கட்டமைப்பை இந்த SOP வழங்குகிறது.
  • இது நகர்ப்புற வெப்பத்தைக் குறைத்தல், கூரையின் மூலம் வெப்பம் உறிஞ்சப் படுவதைக் குறைத்தல் மற்றும் உட்புற வெப்ப வசதியை மேம்படுத்துதல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • தமிழ்நாடு பசுமை பருவநிலை நிறுவனம் (TNGCC) மற்றும் தமிழ்நாடு பருவநிலை மாற்ற இயக்கம் (TNCCM) ஆகியவற்றால் இந்த SOP உருவாக்கப்பட்டுள்ளது.
  • இது ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் திட்டம் (UNEP) மற்றும் SEEDS தொழில்நுட்ப சேவைகள் ஆகியவற்றுடன் இணைந்து தயாரிக்கப்பட்டுள்ளது.
  • குளிர் கூரை பூச்சுகள் என்பவை கட்டடத்தின் வெப்பநிலையையும் ஆற்றல் நுகர்வையும் குறைப்பதற்காகக் கூரைகளில் பூசப்படும் ஒளிப் பிரதிபலிப்புப் பொருட்களாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்