TNPSC Thervupettagam

குழந்தைகளின் பருவநிலை இடர்க் குறியீடு

August 25 , 2021 1545 days 689 0
  • “பருவநிலை நெருக்கடி என்பது ஒரு குழந்தை உரிமைகள் நெருக்கடி : குழந்தைகளின் பருவநிலை இடர்க் குறியீட்டினை அறிமுகப்படுத்துதல் (The Climate Crisis Is a Child Rights Crisis: Introducing the Children’s Climate Risk Index)” எனும் அறிக்கையினை யுனிசெஃப் வெளியிட்டுள்ளது.
  • இக்குறியீடானது புயல் மற்றும் வெப்பக்காற்று போன்ற பருவநிலை மற்றும் சுற்றுச் சூழல் இடர்களில் குழந்தைகளின் வெளிப்பாட்டின் அடிப்படையில் நாடுகளைத் தரநிலைப் படுத்துகிறது.
  • பாகிஸ்தான், வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் மற்றும் இந்தியா உள்ளிட்ட நான்கு தெற்காசிய நாடுகளில் உள்ள குழந்தைகள் பருவநிலை நெருக்கடியில் அதிகப் பாதிப்புக்கு உள்ளாகும் நிலையில் உள்ளனர்.
  • இவை முறையே 14, 15, 25 மற்றும் 26வது இடங்களில் உள்ளன.
  • இக்குறியீடானது, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு சமூக-பொருளாதார ரீதியில் பாதகமான விளைவுகள் ஏற்பட வழி வகுப்பதோடு, மீண்டும் மீண்டும் உருவாகி வரும் சுற்றுச்சூழல் இடர்களாக உள்ள வெள்ளப்பெருக்கு மற்றும் காற்று மாசுபாடு போன்றவற்றுடன் கூடிய 33 மிக அதிக இடர் உள்ள நாடுகளில் ஒன்றாக இந்தியாவை வைத்துள்ளது.
  • 2020 ஆம் ஆண்டில் மிகவும் மாசுபட்ட காற்றுடைய உலகின் 30 நகரங்களுள் 21 நகரங்கள் இந்தியாவில் இருந்தன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்