TNPSC Thervupettagam

குழந்தைகள் நல காவல் அதிகாரி

November 10 , 2022 981 days 450 0
  • உள்துறை அமைச்சகமானது, மாநிலங்கள்/ஒன்றியப் பிரதேசங்களின் அரசுகளை ஒவ்வொரு காவல் நிலையத்திலும் ஒரு குழந்தைகள் நல காவல் அதிகாரியை (CWPO) நியமிக்குமாறு வலியுறுத்தியுள்ளது.
  • அவர்கள் பாதிக்கப்பட்ட அல்லது குற்றவாளிக் குழந்தைகளைக் கையாளச் செய்வது தொடர்பான நடவடிக்கைகளில் மட்டுமே ஈடுபடுவர்.
  • தேசியக் குற்ற ஆவணக் காப்பகத்தின் அறிக்கையின் படி, 2020 ஆம் ஆண்டில் 1,28,531 ஆக இருந்த குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களின் மொத்த எண்ணிக்கை ஆனது 2021 ஆம் ஆண்டில் 1,49,404 ஆக அதிகரித்துள்ளது.
  • இதில் 19,173 வழக்குகளுடன் மத்தியப் பிரதேசம் முதலிடத்திலும், 16,838 வழக்குகளுடன் உத்தரப் பிரதேசம் இரண்டாவது இடத்திலும் உள்ளன.
  • நாடு முழுவதும் பதிவான 1,279 வழக்குகளில் மொத்தம் 1,402 குழந்தைகள் கொலை செய்யப் பட்டுள்ளனர்.
  • 2021 ஆம் ஆண்டில் பதிவான 1,18,549 ஆள் கடத்தல் தொடர்பான வழக்குகளில் 1,15,414 வழக்குகள் குழந்தை கடத்தல் வழக்குகளாகப் பதிவாகியுள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்