TNPSC Thervupettagam

குழந்தைகள் மற்றும் ஆயுதமேந்திய மோதல்கள் குறித்த அறிக்கை

June 24 , 2021 1454 days 605 0
  • ஐக்கிய நாடுகள் தனது குழந்தைகள் மற்றும் ஆயுதமேந்திய மோதல்கள் குறித்த பொதுச் செயலாளரின் வருடாந்திர அறிக்கையினை வெளியிட்டுள்ளது.
  • 2020 ஆம் ஆண்டில் குழந்தைகளுக்கு எதிராக 26,425 கொடிய வன்முறைச் சம்பவங்கள் நடந்தேறியுள்ளதாக இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
  • 2020 ஆம் ஆண்டில் சுமார் 19,300 குழந்தைகள் போரினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
  • கடத்தல் சார்ந்த குற்றங்களும் 90%  அதிகரித்துள்ளன.
  • வன்புணர்வு மற்றும் இதர வகையிலான பாலியல் வன்முறைச் சம்பவங்களும் 70% அதிகரித்துள்ளன.
  • அரிதான மற்றும் இதர வகை பாலியல் வன்முறைகள் போன்ற கொடிய வன்முறைகளால் பாதிக்க ப்படும் நான்கில் ஒரு குழந்தை சிறுமியராவர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்