குழந்தைகள் மற்றும் ஆயுதமேந்திய மோதல்கள் குறித்த அறிக்கை
June 24 , 2021
1454 days
605
- ஐக்கிய நாடுகள் தனது குழந்தைகள் மற்றும் ஆயுதமேந்திய மோதல்கள் குறித்த பொதுச் செயலாளரின் வருடாந்திர அறிக்கையினை வெளியிட்டுள்ளது.
- 2020 ஆம் ஆண்டில் குழந்தைகளுக்கு எதிராக 26,425 கொடிய வன்முறைச் சம்பவங்கள் நடந்தேறியுள்ளதாக இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
- 2020 ஆம் ஆண்டில் சுமார் 19,300 குழந்தைகள் போரினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
- கடத்தல் சார்ந்த குற்றங்களும் 90% அதிகரித்துள்ளன.
- வன்புணர்வு மற்றும் இதர வகையிலான பாலியல் வன்முறைச் சம்பவங்களும் 70% அதிகரித்துள்ளன.
- அரிதான மற்றும் இதர வகை பாலியல் வன்முறைகள் போன்ற கொடிய வன்முறைகளால் பாதிக்க ப்படும் நான்கில் ஒரு குழந்தை சிறுமியராவர்.
Post Views:
605