குறைந்த எடை கொண்ட குழந்தைகளிடையே குழந்தை இறப்பு விகிதத்தை (IMR) குறைக்க தமிழ்நாடு அரசு ஒரு "குழந்தை பராமரிப்பு பெட்டகம்" திட்டத்தை அறிமுகப் படுத்தியது.
இந்தத் திட்டம் இரும்புச் சத்து சொட்டு மருந்துகள், மல்டிவைட்டமின் சொட்டு மருந்துகள், வைட்டமின் டி3 சொட்டு மருந்துகள், ஒரு குழந்தை மருத்துவ அட்டை மற்றும் 12 குழந்தை வளர்ச்சி அறிகுறிகள் குறித்த ஒரு சிறு புத்தகத்தை மாதாந்திரப் பெட்டகங்களாக வழங்குகிறது.
அரசு மருத்துவமனைகளில் ஆண்டுதோறும் சுமார் 4.5 லட்சம் பிரசவங்கள் நடைபெறுகின்றன என்ற நிலையில்மேலும் சுமார் 52,000 குழந்தைகள் குறைந்த எடையுடன் (2.5 கிலோவிற்கும் குறைவாக) பிறக்கின்றன.
மாநில பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட இந்த முயற்சியானது சுமார் ₹8.07 கோடி செலவில் செயல்படுத்தப் படுகிறது.
தமிழ்நாட்டின் பச்சிளம் குழந்தைகளின் இறப்பு விகிதம் ஆனது 1,000 பிறப்புகளுக்கு 8.2 (2023–24) இலிருந்து 7.7 (2024–25) ஆகக் குறைந்துள்ளது.
பிரசவத்திற்கு முந்தைய பராமரிப்பு, நோய்த்தடுப்பு மற்றும் அதிக ஆபத்து எச்சரிக்கைகளை கண்காணிப்பதற்காக வேண்டி கர்ப்பம் மற்றும் குழந்தை கூட்டுக் கண்காணிப்பு மற்றும் மதிப்பீடு (PICME)-க்கானகைபேசி செயலியான “தாய்மை” தொடங்கப் பட்டது.