March 3 , 2021
1556 days
771
- உத்தரப் பிரதேசத்தில் உள்ள கட்டுமானப் பணி நடைபெற்று வரும் குஷிநகர் விமான நிலையமானது சர்வதேச விமானங்களை இயக்குவதற்கான அனுமதியைப் பெற்று உள்ளது.
- இதற்கு விமானப் போக்குவரத்தின் ஒழுங்குமுறை ஆணையகமான விமானப் போக்குவரத்தின் தலைமை இயக்குநரகத்தால் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
- இது செயல்பாட்டிற்கு வந்தால், உத்தரப் பிரதேசத்தில் சர்வதேச விமானங்களை இயக்கும் மூன்றாவது விமான நிலையம் குஷிநகர் விமான நிலையமாகும்.
- தற்பொழுது, உத்தரப் பிரதேசத்தில் செயல்பட்டு வரும் 2 சர்வதேச விமான நிலையங்கள் பின்வருமாறு
- லக்னோவில் உள்ள சௌத்திரி சரண் சிங் சர்வதேச விமான நிலையம்.
- வாரணாசியில் உள்ள லால் பகதூர் சாஸ்திரி சர்வதேச விமான நிலையம்.
Post Views:
771