TNPSC Thervupettagam

கெய்ர்ன் ஆற்றல் - நடுவர் தீர்ப்பாயத்தின் தீர்ப்பு

February 22 , 2021 1608 days 685 0
  • இந்திய அரசானது 1.2 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள சர்வதேச நடுவர் தீர்ப்பாயத்தின் தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்ய முடிவு செய்துள்ளது.
  • வரி தொடர்பான ஒரு பிரச்சினையில் Cairn Energy Plc என்ற நிறுவனத்தினால் அந்த வழக்கு வெற்றி கொள்ளப் பட்டது.
  • இந்நிறுவனமானது 2006-07 ஆம் ஆண்டில் அமெரிக்காவின் ஜெர்சியில் உள்ள நிறுவனங்களுடன்  இணைந்து பரிவர்த்தனைகளை மேற்கொண்டது.
  • இது ஐக்கிய இராஜ்ஜியத்தில் உள்ள கெய்ர்ன் நிறுவனத்திற்கு மூலதன ஆதாயத்திற்கு வழிவகுத்தது.
  • இந்த ஆதாயமானது இந்தியாவில் வரி செலுத்தப்பட வேண்டியதாகும்.
  • எனவே வரியை ஏய்க்கும் நோக்கத்துடன் கெய்ர்ன் நிறுவனம் இந்தியாவிற்கு வெளியே பரிவர்த்தனையை மேற்கொண்டதாக கெய்ர்ன் நிறுவனத்தின் மீது மத்திய அரசு குற்றம் சுமத்துகின்றது.
  • இந்தியாவானது 104 பில்லியன் அளவில் வரியைச் செலுத்துமாறு அந்த நிறுவனத்திடம்  கோரி வருகின்றது.
  • மேலும் இதற்கு சமமான அளவிலான அபராதத் தொகையையும் பெறப்பட்ட வட்டித் தொகையையும் கோரி வருகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்