TNPSC Thervupettagam

கேரளா மற்றும் குடியுரிமை (திருத்தம்) சட்டம்

January 20 , 2020 2022 days 808 0
  • குடியுரிமை (திருத்தம்) சட்டத்திற்கு (Citizenship Amendment Act - CAA) எதிராக உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்வதற்காக 131வது சரத்தை கேரள மாநில அரசு பயன்படுத்தியுள்ளது.
  • இந்திய அரசியலமைப்பின் சரத்து 14, சரத்து 21 மற்றும் சரத்து 25 ஆகியவற்றை மீறுவதாகக் கூறி CAA ஐ எதிர்த்து உச்ச நீதிமன்றத்தை நாடிய முதலாவது மாநிலமாக கேரளா உருவெடுத்துள்ளது.
  • சரத்து 131 ஆனது அசல் அதிகார வரம்பு என அழைக்கப் படுகின்றது. இந்தச் சரத்தின் கீழ், மாநிலங்களுக்கிடையில் அல்லது மத்திய அரசிற்கும் மாநிலத்திற்கும் இடையில் எழும் எந்தவொரு பிரச்சினைகளைக் களைவதிலும் உச்ச நீதிமன்றத்திற்கு அசல் அதிகார வரம்பு உள்ளது.
  • இந்தச் சரத்தானது கீழ் நீதிமன்றத்தின் மூலமாக அல்லது கீழ் நீதிமன்றத்தின் தீர்ப்பை மறுபரிசீலனை செய்வதற்குப் பதிலாக இது போன்ற வழக்குகளை நேரடியாக எடுத்து விசாரிக்க உச்ச நீதிமன்றத்தை அனுமதிக்கின்றது.
  • CAA சட்டத்திற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் பல மனுக்கள் தாக்கல் செய்யப் பட்டுள்ளன.
  • உச்ச நீதிமன்றம் இந்த மனுக்களை தனித்தனியாக விசாரிக்கலாம் அல்லது அவற்றை ஒன்றாக இணைக்கலாம். ஆனால் கேரள அரசாங்கத்தின் மனுவை மட்டும் அந்த மனுக்களுடன் இணைக்க முடியாது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்