கேரளாவில் சிறு நெகிழித் துகள்கள்
- MSC ELSA3 என்ற கொள்கலன் கப்பல் மூழ்கியதைத் தொடர்ந்து கேரளாவின் திருவனந்த புரத்தில் உள்ள கடற்கரைகளில் சிறிய நெகிழித் துகள்கள் காணப்படுகின்றன.
- முதன்மையான சிறு நெகிழித் துகள்கள் என வகைப்படுத்தப்பட்ட இந்தத் துகள்கள் ஆனது 1 மில்லி மீட்டர் முதல் 5 மில்லி மீட்டர் வரையிலான விட்டம் கொண்டவை.
- கொச்சு வேலியில் காணப்படும் துகள்கள் பெரும்பாலும் குறைந்த அடர்த்தி கொண்ட பாலிஎத்திலீன் (LDPE) மற்றும் அதிக அடர்த்தி கொண்ட பாலிஎத்திலீன் (HDPE) ஆகும்.
- இந்தத் துகள்கள் உருக்கப்பட்டு பொட்டலங்கள், தண்ணீர் குடுவைகள், பொம்மைகள் மற்றும் ஜவுளி உள்ளிட்ட பல்வேறு பொருட்களாக வடிவமைக்கப்படுகின்றன.
- இவை மிக இயல்பாகவே நச்சுத் தன்மையற்றதாக இருந்தாலும், இந்தத் துகள்கள் ஒரு ஆபத்தான மாசுபடுத்தியாகவே உள்ளன.
- அவை சிறு மற்றும் குறு நெகிழித் துகள்களாக உடைந்து உணவுச் சங்கிலியில் நன்கு நுழையும்.
- ஒரு கப்பல் விபத்து காரணமாக இந்தியாவில் சிறு நெகிழித் துகள்கள் கரை ஒதுங்கும் முதல் பெரிய சம்பவம் இதுவாகும்.

Post Views:
34