கேரளாவின் மேற்குத் தொடர்ச்சி மலைகளில் உலகின் அரிதான விண்மீன் தவளைகளில் ஏழு (மெலனோபாட்ராக்கஸ் இண்டிகஸ்) மறைந்து விட்டன, அதாவது இறந்து விட்டதாகக் கருதப் படுகிறது.
இந்தத் தவளைகள் கேரளாவின் மேற்குத் தொடர்ச்சி மலைகளில் மட்டுமே காணப்படும் சிறிய நீர்நில வாழ் இனங்கள் ஆகும்.
ஆராய்ச்சியாளர்கள் 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் சிதைந்த மரக்கட்டைகளின் கீழ் ஏழு தவளைகளைக் கண்டுபிடித்தனர்.
2020 ஆம் ஆண்டு ஜூன் மற்றும் 2021 ஆம் ஆண்டு ஏப்ரல் காலகட்டத்திற்கு இடையில், புகைப்படக் கலைஞர்கள் மரக்கட்டைகளை கவிழ்த்து, அதிக ஒளிர்வு மிக்க வெட்டொளிகளைப் பயன்படுத்தி அவற்றின் வாழ்விடத்தை இடையூறு செய்தனர்.
2021–2022 ஆம் ஆண்டில் ஆராய்ச்சியாளர்கள் திரும்பி வந்த போது, ஏழு தவளைகளும் மறைந்து விட்டன.
இந்த இனம் சர்வதேச இயற்கைப் பாதுகாப்பு ஒன்றியத்தால் (IUCN) எளிதில் பாதிக்கப் படக்கூடியதாகப் பட்டியலிடப்பட்டுள்ளது என்பதோடுவாழ்விட இழப்பு, நிலச்சரிவுகள் மற்றும் புகைப்படச் சுற்றுலாவால் இது அச்சுறுத்தப்படுகிறது.