TNPSC Thervupettagam

கேலோ இந்தியா நீர் விளையாட்டு விழா

August 19 , 2025 2 days 23 0
  • முதல் முறையாக நடைபெறும் கேலோ இந்தியா நீர் விளையாட்டுப் போட்டிகள் ஆனது (KIWSF) ஸ்ரீநகரின் தால் ஏரியில் நடைபெற உள்ளன.
  • சாகசம், ஆற்றல் மற்றும் காஷ்மீரின் உணர்வைக் குறிக்கும் வகையில் இமயமலை மீன்கொத்திப் பறவை அப்போட்டிகளின் உருவச் சின்னமாக அறிமுகப் படுத்தப் பட்டது.
  • KIWSF போட்டிகளில் நீர்ச் சறுக்கல், டிராகன் படகுப் பந்தயம் மற்றும் ஷிகாரா பந்தயம் போன்ற செயல் விளக்கப் போட்டி நிகழ்வுகளுடன் படகோட்டுதல், கேனோயிங் மற்றும் கயாக்கிங் போன்ற சிறு படகோட்டுதல் ஆகியவற்றில் பதக்கங்களுக்கான போட்டி நிகழ்வுகளும் அடங்கும்.
  • 2025 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் குல்மார்க் நகரில் கேலோ இந்தியா குளிர்கால விளையாட்டுப் போட்டிகளுக்கான (KIWG) பனிச் சூழல்சார் விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டதற்கு பிறகு, ஜம்மு & காஷ்மீரில் நடைபெறும் இரண்டாவது கேலோ இந்தியா போட்டி இதுவாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்