January 23 , 2021
1611 days
1058
- இது 2020 ஆம் ஆண்டில் மழைக்காலக் கூட்டத் தொடரின் போது அரசினால் நிறுத்தி வைக்கப் பட்டது.
- ஜனவரி 29 ஆம் தேதியன்று பட்ஜெட் கூட்டத் தொடருக்காகப் பாராளுமன்றம் கூடும் போது இது மீண்டும் செயல்பாட்டிற்கு வரும்.
- ஒவ்வொரு நாடாளுமன்ற அமர்வின் முதல் 1 மணி நேரம் கேள்வி நேரம் என்று வரையறுக்கப் படுகின்றது.
- இது அவையின் நடைமுறை விதிகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.
- இரு அவைகளின் முன்னிலைத் தலைவர்களும் மாநிலங்களவை மற்றும் மக்களவை ஆகிய அவைகளில் கேள்வி நேரத்தை நடத்துவதற்கு இறுதி அதிகாரத்தைப் பெற்று உள்ளவர்களாவர்.
- இரண்டு அவைகளிலும் கேள்வி நேரமானது அந்தத் தொடரின் அனைத்து நாட்களிலும் நடைபெறும்.
- ஆனால் பின்வரும் 2 நாட்களுக்கு மட்டும் இதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
- மத்திய வளாகத்தில் இரு அவைகளைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களிடையே குடியரசுத் தலைவர் உரையாற்றும் போது கேள்வி நேரமானது இருக்காது.
- நிதியமைச்சர் நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்யும் தினத்தன்றும் கேள்வி நேரமானது இருக்காது.
Post Views:
1058