TNPSC Thervupettagam

கைலாஷ் மானசரோவர் யாத்திரை 2025

July 1 , 2025 9 hrs 0 min 15 0
  • கோவிட்-19 பெருந்தொற்று மற்றும் எல்லை சார்ந்த பதட்டச் சூழல்கள் காரணமாக ஆறு ஆண்டுகால இடைவெளிக்குப் பிறகு, கைலாஷ் மானசரோவர் யாத்திரை 2025 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் மீண்டும் தொடங்கியுள்ளது.
  • இது மெய்க் கட்டுப்பாட்டுப் பகுதியில் (LAC) ஏற்பட்ட மோதலுக்குப் பிறகு நிகழும் முதல் இந்தியா-சீனா மக்கள் பரிமாற்றத்தைக் குறிக்கிறது.
  • இந்த யாத்திரையானது ஜூன் முதல் ஆகஸ்ட் மாதம் வரையில் வெளியுறவுத் துறை அமைச்சகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
  • இந்த யாத்திரைக்கான இரண்டு அதிகாரப்பூர்வ வழித்தடங்கள் உத்தரக்காண்டில் உள்ள லிபுலேக் கணவாய் (1981 ஆம் ஆண்டு முதல்) மற்றும் சிக்கிமில் உள்ள நாது லா கணவாய் (2015 ஆம் ஆண்டு முதல்) ஆகும்.
  • கைலாய மலை மற்றும் மானசரோவர் ஏரி ஆகியவை திபெத்தில், கைலாய மலையின் தெற்கு அடிவாரத்திற்கு அருகில் அமைந்துள்ளன.
  • மானசரோவர் ஏரி உலகின் மிக உயரமான இடத்தில் உள்ள நன்னீர் ஏரியாகும்.
  • இந்த யாத்திரை இந்துக்கள், பௌத்தர்கள், சமணர்கள் மற்றும் பான் சமயத்தினைப் பின்பற்றுபவர்களுக்கு அதன் சமய மற்றும் ஆன்மீக முக்கியத்துவத்திற்காக அறியப் படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்