கைவினைப் பொருட்கள் கிராமம் என்பது, தொகுப்பாக வாழும் கைவினைஞர்களுக்கு தொழில்வளம் மிக்க மற்றும் வருமானம் தரக்கூடிய ஒரு வாழ்வாதாரம் மூலமாக கை வினைப் பொருட்கள் தொழிலினை ஊக்குவிக்கும்.
கைவினைப் பொருட்கள் கிராமத்தில் உள்ள உள்கட்டமைப்பு மற்றும் சுற்றுப்புறச் சூழல் ஆகியவை இந்தியாவின் கிராமப்புற வாழ்க்கையை உணர்த்தும் வகையில் கிராமப்புற பாணியில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக, ரகுராஜ்பூர் (ஒடிசா), திருப்பதி (ஆந்திரப் பிரதேசம்), வதாஜ் (குஜராத்), நைனி (உத்தரப் பிரதேசம்), ஆனேகுண்டி (கர்நாடகா), மகாபலிபுரம் (தமிழ்நாடு), தாஜ் கஞ்ச் (உத்தரப் பிரதேசம்) மற்றும் அமேர் (ராஜஸ்தான்) ஆகிய இடங்களில் 8 கை வினைப் பொருட்கள் கிராமங்கள் நிறுவப் பட்டுள்ளன.