TNPSC Thervupettagam

கொச்சி கப்பல் விபத்து

June 3 , 2025 6 days 59 0
  • கேரள மாநில அரசானது, லைபீரிய நாட்டின் சரக்குக் கப்பல் விபத்தை அம்மாநிலம் சார்ந்த பேரிடராக அறிவித்துள்ளது.
  • IMO எண் 9123221 கொண்ட MSC ELSA-3 என்ற கப்பல் கேரளக் கடற்கரைக்கு அருகில் கடலில் மூழ்கியது.
  • இதில் 13 ஆபத்தான சரக்குகள் மற்றும் 12 கால்சியம் கார்பைடுகளுடன் கூடிய 640 கொள்கலன்கள் இருந்தன.
  • மாசுபாட்டிற்கான எதிர் நடவடிக்கை உபகரணங்களை ஏற்றிச் செல்லும் ICG கப்பல் சாக்சம் என்பது தளத்தில் தொடர்ந்து நிலை நிறுத்தப் பட்டுள்ளது.
  • கொச்சியில் உள்ள ICG கப்பலின் கடல்சார் மீட்பு துணை மையம் (MRSC) ஆனது உடனடியாக ஒருங்கிணைந்த எதிர் நடவடிக்கையினைத் தொடங்கியது.
  • கடலோரக் காவல்படையின் டோர்னியர் விமானம் வான்வழிக் கண்காணிப்புக்காக நிலை நிறுத்தப்பட்டது.
  • அதைத் தொடர்ந்து, ICG ரோந்து கப்பல்கள் மற்றும் வணிகக் கப்பல்களான MV ஹான் யி மற்றும் MSC சில்வர் 2 ஆகியவை விபத்தில் சிக்கிய குழுவினருக்கு உதவ இந்தப் பகுதிக்குத் திருப்பி விடப்பட்டன.
  • புவி அறிவியல் துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் ஹைதரபாத்தில் உள்ள இந்திய தேசிய கடல் சார் தகவல் சேவை மையம் (INCOIS) ஆனது நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறது.
  • கொள்கலன்கள் அல்லது மிதக்கும் பொருட்களைக் கண்டறிய உதவுவதற்காக INCOIS அதன் தேடல் மற்றும் மீட்பு உதவி கருவியை (SARAT) செயல்படுத்தியுள்ளது.
  • இந்திய கடலோர காவல்படை (ICG) கப்பல்களான விக்ரம், சாக்சம் மற்றும் சமர்த் ஆகியவை எண்ணெய்க் கசிவின் அளவைக் கண்டறிய அகச்சிவப்பு சார் ஒளிப்படக் கருவிகளை கொண்டு ஆராய்ந்து வருகின்றன.
  • கொச்சியில் உள்ள வணிகக் கடல்சார் துறை, கப்பல் உரிமையாளர்களான MSCக்கு 1958 ஆம் ஆண்டு வணிகக் கப்பல் சட்டத்தின் கீழ் மாசுபாட்டுப் பொறுப்பு ஏற்பு எச்சரிக்கையை வெளியிட்டது.
  • மாசுபாட்டு எதிர் நடவடிக்கை கப்பலான சமுத்திர பிரஹாரியும் நிலை நிறுத்தப் பட்டு உள்ளது.
  • கப்பலில் இருந்து கசியும் எண்ணெய் பரவுவதைத் தடுக்க அவை எண்ணெய்க் கசிவு மீட்பு (OSD) கருவியையும் பயன்படுத்தின.

தமிழ்நாட்டில் அதன் தாக்கம்

  • கன்னியாகுமரி மாவட்டத்தின் மேற்குப் பகுதியிலுள்ள சில கடலோரக் கிராமங்களில் பல பகுதிகளில் சிறிய நெகிழித் துகள்கள் (நுர்டில்ஸ்) கரை ஒதுங்கியுள்ளன.
  • கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள இனயம் புத்தன்துறை, வள்ளவிளை மற்றும் இரவி புத்தன்துறை மற்றும் இன்னும் சில கடலோரக் கிராமங்களின் கரையோரத்தில் சில சேதமடைந்தத் துகள்கள் மற்றும் சிறிய நெகிழித் துகள்கள் காணப்பட்டன.
  • குளச்சல் அருகே உள்ள கொடிமுனை மற்றும் வாணியக்குடி ஆகிய சில கடலோரக் கிராமங்களுக்கு இடையில் ஒரு கண்டெய்னர் கரையில் ஒதுங்கியதும் கண்டுபிடிக்கப் பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்