கொத்தடிமை தொழிலாளர் முறை (ஒழிப்பு) சட்டம் – 50வது ஆண்டு தினம்
February 12 , 2026 96 days 253 0
கொத்தடிமை தொழிலாளர் முறையை ஒழித்த 1976 ஆம் ஆண்டு கொத்தடிமை தொழிலாளர் முறை (ஒழிப்பு) சட்டத்தின் (BLSA) 50வது ஆண்டை இந்தியா கொண்டாடுகிறது.
இந்தச் சட்டம் கொத்தடிமை தொழிலாளர்களை சட்டவிரோதமாக அறிவித்து, கொத்தடிமை கடன்களை ரத்து செய்ததுடன், கொத்தடிமை தொழிலாளர்களை விடுவிக்கவும் உத்தரவிட்டது.
மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் விழிப்புணர்வு குழுக்கள் ஆகியோர் கொத்தடிமை தொழிலாளர்களை அடையாளம் காணுதல், விடுவித்தல் மற்றும் மறுவாழ்வு அளித்தல் ஆகியவற்றிற்கு பொறுப்பானவர்கள் ஆவர்.
நிதி உதவி, நிலம், வீட்டு வசதி மற்றும் வாழ்வாதாரத் திட்டங்கள் போன்ற மறுவாழ்வு ஆதரவை சட்டம் வழங்குகிறது.
இந்திய அரசியலமைப்பின் சரத்துகள் 21, 23 மற்றும் 24 மக்களை கட்டாய உழைப்பு மற்றும் சுரண்டலில் இருந்து பாதுகாக்கின்றன.
பாரதிய நியாய சன்ஹிதா (BNS), 2023 இன் பிரிவு 143, கடத்தல் மற்றும் கட்டாய உழைப்பை தண்டணைக்குரிய குற்றமாக்குகிறது.