கொம்புக்கண்கள் கொண்ட பேய் நண்டு, புள்ளிகளுடன் கூடிய லேசான கால்கள் கொண்ட நண்டை (பாறைப் பதுங்கி நண்டுகள்) வேட்டையாடுவதற்கான முதல் உறுதிப் படுத்தப் பட்ட நிகழ்வை ஆராய்ச்சியாளர்கள் பதிவு செய்தனர்.
தாழ் ஓத அலைகளின் போது ருஷிகொண்டா கடற்கரையில் இது நிகழ்ந்தது.
பாறைப் பதுங்கி நண்டுகள் பொதுவாக பாறை பிளவுகளில் வாழ்கின்றன அதே நேரத்தில் கொம்புக்கண்கள் கொண்ட பேய் நண்டுகள் பொதுவாக மணல் பரப்புகளில் காணப்படுகின்றன.
இந்த வேட்டையாடுதல் ஆனது அவற்றின் வாழ்விடங்களின் தற்காலிகக் குறுக்கிடல் மற்றும் கொம்புக்கண்கள் கொண்ட பேய் நண்டின் உணவு தேடும் நடத்தையின் விரிவாக்கத்தினைக் குறிக்கிறது.
ஓசிபோட் இனத்தைச் சேர்ந்த பேய் நண்டுகள், மணல் நிறைந்த ஓத அலைகளுக்கு இடையேயான மண்டலங்களில் காணப்படும் முக்கிய இனங்கள் ஆகும்.
இந்தியாவின் கடற்கரையில் ஆறு பேய் நண்டு இனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனஎன்பதோடுஅவற்றில், O. ப்ரீவிகார்னிஸ், O. மேக்ரோசெரா மற்றும் O. கார்டிமானஸ் ஆகிய மூன்று இனங்கள் ருஷிகொண்டா கடற்கரையில் காணப்படுகின்றன.