எழுத்தாளர் கி. ராஜநாராயணன் எழுதிய புகழ்பெற்ற நாவலான 'கோபல்லபுரத்து மக்கள்', தற்போது ஆங்கிலத்தில் 'People of Gopallapuram' என்ற பெயரில் வெளியிடப் பட்டுள்ளது.
கி.ரா. (1923–2021) என்று அழைக்கப்படும் கி. ராஜநாராயணன், ஒரு புகழ்பெற்ற தமிழ் எழுத்தாளர் மற்றும் கரிசல் இலக்கியத்தின் முன்னோடி ஆவார்.
இவர் தெற்கு தமிழகத்தின் கிராமப்புற வாழ்க்கை, நாட்டுப்புற கலாச்சாரம், விவசாயம் மற்றும் பாரம்பரியங்களை எளிய வட்டார மொழி நடையில் பதிவு செய்தவர்.
கிராம மக்களின் வாய்மொழிக் கதைகள் மற்றும் பேச்சு வழக்குகளைத் தனது படைப்புகளில் ஆவணப்படுத்தியதற்காக இவர் நன்கு அறியப்பட்டவர்.
அதிகப்படியான வாசகர்களைச் சென்றடையும் வகையில், இந்தப் புத்தகத்தை சுபாஸ்ரீ தேசிகன் என்பவர் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துள்ளார்.