2026 ஆம் ஆண்டு சர்வதேச பல்லுயிர் பெருக்க தினத்தின் கருத்துருவான Local Action, Global Impact என்பதன் கீழ் கோப்ரா நீர்த்தேக்கம் ஒரு பல்லுயிர் மாதிரி அமைப்பாக உருவெடுத்துள்ளது.
கோப்ரா நீர்த்தேக்கம் சத்தீஸ்கரின் பிலாஸ்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது மற்றும் இது சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த அந்த மாநிலத்தின் முதல் ராம்சர் தளமாகும்.
இது முதலில் நீர்ப்பாசனம் மற்றும் மீன் வளர்ப்புக்காக கட்டப்பட்டது, பின்னர் அது தன்னைத் தானே நிலைநிறுத்திக் கொள்ளும் ஈரநிலச் சூழல்மண்டலமாக உருவாக்கப் பட்டது.
இந்த நீர்த்தேக்கம் புலம்பெயர்ந்த பறவைகளின் முக்கிய வாழ்விடமாக உள்ளதுடன், வளமான நீர்வாழ் பல்லுயிர்களுக்கு ஆதரவளிக்கிறது.
உள்ளூர் சமூகங்கள், கிராமப் பஞ்சாயத்துகள் மற்றும் சுய உதவிக் குழுக்கள் (SHGs) ஆகியன ஈரநிலப் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகளில் பங்கேற்கின்றன.