TNPSC Thervupettagam

கோயில் நிதியின் மாற்று பயன்பாடு

July 31 , 2025 12 hrs 0 min 23 0
  • தமிழ்நாட்டில் கோயில் நிதியைக் கல்லூரிகள் கட்டுவதற்கு வேண்டிப் பயன்படுத்தும் பிரச்சினை குறித்து சமீபத்தில் ஓர் சர்ச்சை வெடித்தது.
  • முதன்மையாக முந்தைய மதராஸ் மாகாணத்தில் உருவாக்கப்பட்ட 200 ஆண்டுகள் பழமையான இந்த மாதிரியானது, இன்று வரையில் தொடர்கின்ற ஒரு சட்டத்திலிருந்து அதன் வலிமையைப் பெறுகிறது.
  • மேலும் இது தென்னிந்தியாவில் அதிக வரவேற்பைப் பெற்றுள்ளது.
  • 1817 ஆம் ஆண்டு சமய அறக்கட்டளை மற்றும் இறையுரிமைப்பாடு ஒழுங்குமுறை மூலம், கிழக்கிந்திய நிறுவனம் சமய அறக்கட்டளைகளை ஒழுங்குபடுத்துவதைச் சார்ந்த ஆரம்பகாலச் சட்டப்பூர்வ கட்டமைப்பை அமைத்தது.
  • 1858 ஆம் ஆண்டில் பிரிட்டிஷ் இராணி இந்திய ஆட்சிப் பிரதேசங்களின் மீது நேரடி கட்டுப்பாட்டை ஏற்றுக் கொண்ட போது, சமய விவகாரங்களில் தலையிடுவதை பிரிட்டிஷ் அரசு கட்டுப்படுத்திக் கொள்ளும் என்று கூறி விக்டோரியா மகாராணி ஒரு பிரகடனத்தை வெளியிட்டார்.
  • 1920 ஆம் ஆண்டில் நீதிக்கட்சி தேர்ந்தெடுக்கப்பட்டபோது, சமய நிறுவனங்களை அரசாங்கம் மேற்பார்வையிடும் கருத்தாக்கம் வடிவமாக்கப் பட்டது.
  • நீதிக் கட்சி ஆட்சியாளர்களின் ஆரம்பகாலச் சட்ட தலையீடுகளில் ஒன்று ‘1922 ஆம் ஆண்டின் மசோதா எண் 12: இந்து சமய அறநிலையச் சட்டம்’ என்பதாகும்.
  • ஒரு கோவிலுக்கு வழங்கப்படும் நிதியை மதச்சார்பற்ற நோக்கங்களுக்காகப் பயன்படுத்த முடியுமா என்பதுதான் இங்குள்ள பிரச்சினையாகும்.
  • இந்த விவகாரம் விவாதிக்கப்பட்டு, 1925 ஆம் ஆண்டு சட்டம் இயற்றப்பட்ட போது தீர்க்கப் பட்டது.
  • தற்போது நடைமுறையில் உள்ள சட்டம் தமிழ்நாடு இந்து சமய அறநிலைய துறைச் சட்டம், 1959 ஆகும்.
  • இது உபரி நிதியை பயன்படுத்திக் கொள்ளும் அந்த விதியை தக்க வைத்துக் கொண்டு உள்ளது.
  • 1959 ஆம் ஆண்டு சட்டத்தின் 36வது பிரிவு, சமய நிறுவனங்களின் அறங்காவலர்கள் இச்சட்டத்தின் கீழ் பட்டியலிடப்பட்டுள்ள எந்தவொரு நோக்கத்திற்காகவும், வேண்டி ஆணையரின் முன் அனுமதியுடன், எந்தவொரு உபரி நிதியையும் வழங்க அனுமதிக்கிறது.
  • சோழப் பேரரசு உச்சத்தில் இருந்த கி.பி 970 ஆம் ஆண்டு முதல், கோயில்கள் இறையாண்மை கொண்ட ஆட்சியாளர்களிடமிருந்து ஏராளமான நன்கொடைகளைப் பெற்றுள்ளன.
  • கடந்த நூற்றாண்டில், மதராஸ் மாகாணத்திலிருந்து தோன்றிய சுயமரியாதை இயக்கம், கோயில்களை ஒழுங்குபடுத்துவதையும் அவற்றின் வளங்களை மேற்பார்வையிடுவதையும் சாதி எதிர்ப்பு மீதான சீர்திருத்தங்களின் ஒரு முக்கிய அம்சமாகக் கருதியது.
  • இது இல்லாமல், 1936 மற்றும் 1947 ஆம் ஆண்டுகளில் கோயில் நுழைவுச் சட்டம் உருவாகியிருக்காது.
  • இன்று, தமிழ்நாடு மற்றும் கேரளா ஆகியவை நீண்ட சட்டப் போராட்டத்திற்குப் பிறகு பிற்படுத்தப்பட்ட வகுப்பினரைச் சேர்ந்த அர்ச்சகர்களை அரசாங்கங்கள் நியமித்த சில மாநிலங்களில் அடங்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்