வேளாண் அமைச்சகத்தின் கீழான கால்நடை வளர்ப்பு, பால்வளம் மற்றும் மீன் வளத் துறையானது கோழிப் பண்ணைகளுக்கான ஒரு புதிய வழிகாட்டுதல் தொகுப்பினை வெளியிட்டுள்ளது.
பண்ணையிலுள்ள கோழிகளின் எண்ணிக்கையைப் பொறுத்து இது கோழிப் பண்ணைகளை வகைப்படுத்துகிறது.
சிறு பண்ணை – 5000 முதல் 25000 வரையிலான கோழிகள்
நடுத்தரப் பண்ணை – 25000 முதல் 1 லட்சம் வரையிலான கோழிகள்
பெரிய பண்ணை – 1 லட்சத்திற்கும் மேலான கோழிகள்
ஒரு பண்ணையானது,
குடியிருப்புப் பகுதியிலிருந்து 500 மீட்டருக்கு அப்பாலும்,
ஆறுகள், ஏரிகள், கால்வாய்கள் மற்றும் குடிநீர் ஆதாரங்களிலிருந்து 100 மீட்டர் தொலைவிலும்
தேசிய நெடுஞ்சாலையிலிருந்து 100 மீட்டர் தொலைவிலும் மற்றும்
கிராம நடைபாதைகள் மற்றும் கிராமச் சாலைகளிலிருந்து 10-15 மீட்டர்கள் தொலைவிலும் அமைக்கப்பட வேண்டும்.
இந்தப் புதிய விதிமுறையின் கீழ், நடுத்தர அளவிலான கோழிப் பண்ணையினை வைத்துள்ள ஒரு உரிமையாளர் தண்ணீர்ச் சட்டம், 1974 மற்றும் காற்றுச் சட்டம், 1981 ஆகியவற்றின் கீழ் மாநில மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்திடமிருந்து ஒரு அனுமதி சான்றிதழைப் பெற வேண்டும்.
இந்த அனுமதியானது 15 ஆண்டுகளுக்குச் செல்லுபடி ஆகும்.
கால்நடை வளர்ப்புத் துறையானது மாநிலம் மற்றும் மாவட்டங்கள் அளவில் இந்த வழிகாட்டுதல்களை அமல்படுத்துவதற்கான பொறுப்பினைக் கொண்டதாகும்.