கோவா மாநிலம் 1987 ஆம் ஆண்டு மே 30 ஆம் தேதியன்று மாநில அந்தஸ்தைப் பெற்று இந்தியாவின் 25 வது மாநிலமாக மாறியது.
இது 1510 ஆம் ஆண்டில் பீஜப்பூரின் அடில் ஷா என்பவரை வீழ்த்தி, அல்போன்சோ டி அல்புகெர்க் என்பவர் கோவாவைக் கைப்பற்றியதிலிருந்து இது ஒரு போர்த்துகீசியப் பிரதேசமாக இருந்தது.
பின்னர் 400 ஆண்டுகளுக்குப் பிறகு, இந்திய நாடானது போர்த்துகீசியர்களிடமிருந்து கோவாவை மீட்டெடுத்தது.
போர்த்துகீசியர்களிடமிருந்து கோவாவை விடுவிப்பதற்காக என்று இந்திய ராணுவம் ஆனது 1961 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் "ஆபரேஷன் விஜய்" என்ற ஒரு ராணுவ நடவடிக்கையின் கீழ் கோவாவை ஆக்கிரமித்தது.
கோவா இணைக்கப்படுவதற்கான நடவடிக்கையானது 1961 ஆம் ஆண்டு டிசம்பர் 17 ஆம் தேதியன்று இந்திய இராணுவத்தினால் தொடங்கப் பட்டது.