TNPSC Thervupettagam

கோவா விடுதலை தினம் 2025 - டிசம்பர் 19

December 23 , 2025 2 days 27 0
  • 1961 ஆம் ஆண்டு போர்த்துகீசிய ஆட்சியில் இருந்து கோவா விடுவிக்கப் பட்டதை நினைவு கூரும் வகையில் ஒவ்வோர் ஆண்டும் இத்தினம் அனுசரிக்கப்படுகிறது.
  • 1947 ஆம் ஆண்டில் இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகும் கோவா போர்த்துகீசியக் கட்டுப்பாட்டின் கீழ் இருந்தது.
  • 1510 ஆம் ஆண்டு முதல் 450 ஆண்டுகளுக்கும் மேலாக போர்த்துகீசியர்கள் கோவாவை ஆட்சி செய்தனர்.
  • விஜய் நடவடிக்கை (1961) என்பது கோவா, டாமன் மற்றும் டையூவை விடுவிப்பதற்காக இந்திய காலாட்படை, கடற்படை மற்றும் விமானப்படை மேற்கொண்ட ஒரு இராணுவ நடவடிக்கையாகும்.
  • இந்த நடவடிக்கை சுமார் 36 மணி நேரத்தில் நிறைவடைந்தது, மேலும் போர்த்துகீசிய ஆளுநர் 1961 ஆம் ஆண்டு டிசம்பர் 19 ஆம் தேதியன்று சரணடைந்தார்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்