குஜராத், அசாம், ஆந்திரா மற்றும் பஞ்சாப் ஆகிய நான்கு மாநிலங்களில் கோவிட் தடுப்பூசி குறித்து மீது ஒரு சோதனைப் பயிற்சி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இந்தத் தடுப்பூசி சோதனைகள் இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்தால் இணைந்து வழங்கப்படும்.
சீரம் இந்தியா நிறுவனமானது ஏற்கனவே ஆக்ஸ்போர்டு-அஸ்ட்ராசெனெகா நிறுவனத்தின் கோவிட் -19 தொற்று குறித்த ‘கோவிஷீல்ட்’ என்ற தடுப்பூசியினைச் சுமார் 50 மில்லியன் அளவில் தயாரித்துள்ளது.
புனேவைச் சேர்ந்த சீரம் இந்தியா நிறுவனமானது உலகின் மிகப்பெரிய தடுப்பூசி உற்பத்தியாளராகும்.
மருந்துக் கட்டுப்பாட்டாளர் அமைப்பான இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகமானது ஒரு அவசரப் பயன்பாட்டு ஒப்புதலுக்காக வேண்டி மூன்று தடுப்பூசிகளைப் பரிசீலித்து வருகிறது - அவை அஸ்ட்ராஜெனெகா, ஃபைசர்/பயோன்டெக் மற்றும் உள்நாட்டு நிறுவனமான பாரத் பயோடெக் உருவாக்கிய ஒரு தடுப்பூசி ஆகியன ஆகும்.
இந்தியாவில் எட்டு கோவிட் -19 தடுப்பூசிகள் வெவ்வேறு கட்ட சோதனைகளின் கீழ் உள்ளன, இதில் மூன்று உள்நாட்டிலேயே தயாரித்தவை ஆகும்.
இதில் ஆக்ஸ்போர்டு-அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசியான கோவிஷீல்ட், இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம்-பாரத் பயோடெக் இணைந்து தயாரித்த தடுப்பூசியான கோவாக்சின், ரஷ்யாவின் தடுப்பூசியான ஸ்புட்னிக்-வி மற்றும் ஜைடஸ் கடிலாவின் தடுப்பூசியான ஜைகோவ்-டி ஆகியவை அடங்கும்.
மேலும் சீரம் இந்தியாவின் என்விஎக்ஸ்-கோவி 2373 மற்றும் ஜெனீவாவின் எச்ஜிசி 019 ஆகியவற்றுடன் சேர்த்து பாரத் பயோடெக் மற்றும் பயோலாஜிக்கல் இ லிமிடெட் ஆகியவற்றின் பெயரிடப்படாத இரண்டு தடுப்பூசிகள் ஆகியவையும் இதில் அடங்கும்.