மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா கோவிட்-19 தொற்றுநோய் தடுப்பூசியின் நினைவாக உருவாக்கப்பட்ட ஒரு அஞ்சல் தலையை வெளியிட்டார்.
இந்தியாவின் தேசிய அளவிலான கோவிட் தொற்று தடுப்பூசி வழங்கீட்டுத் திட்டத்தின் முதலாவது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் இது வெளியிடப்பட்டது.
இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் குழு மற்றும் பாரத் பயோடெக் நிறுவனம் ஆகியவை இணைந்து உள்நாட்டிலேயே உருவாக்கிய கோவாக்சின் தடுப்பூசி நினைவாக இது வெளியிடப் பட்டுள்ளது
2021 ஆம் ஆண்டு ஜூன் 21 முதல், 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி இலவசம் என அறிவிக்கப்பட்டது.