TNPSC Thervupettagam

கோவிட்-19 பெருந்தொற்று காலங்களின் போது இந்தியாவில் பதிவான உயிர் இழப்புகள்

May 12 , 2025 17 hrs 0 min 23 0
  • 2020 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது, 2021 ஆம் ஆண்டில் சுமார் 21 லட்சம் உயிரி இழப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகப் பிறப்பு மற்றும் உயிரிழப்புகளின் பதிவுகள் காட்டுகின்றன.
  • இந்த எண்ணிக்கையானது, 2021 ஆம் ஆண்டில் இந்தியாவில் கோவிட்-19 தொற்று காரணமாக ஏற்பட்ட 3.32 லட்சம் என்ற அதிகாரப்பூர்வ உயிரிழப்பு எண்ணிக்கையை விட ஆறு மடங்கு அதிகமாகும்.
  • மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் கோவிட்-19 தளத்தின் முகப்பு பக்கத்தில் அதிகாரப்பூர்வ மொத்தப் பெருந்தொற்று காரணமாக ஏற்பட்ட உயிரிழப்பு எண்ணிக்கை 5.33 லட்சமாக இருந்தது.
  • 2022 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட உலக சுகாதார அமைப்பின் ஒரு அறிக்கையானது, 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் இந்தியாவில் பதிவான "அதிகப்படியான" உயிர் இழப்புகளின் எண்ணிக்கையை சுமார் 47 லட்சமாகக் குறிப்பிடுகிறது.
  • அந்த இரண்டு ஆண்டுகளுக்கு இந்தியாவில் 4.8 லட்சமாகப் பதிவான அதிகாரப்பூர்வ உயிரிழப்பு எண்ணிக்கையை விட இது கிட்டத்தட்ட 10 மடங்கு அதிகமாகும்.
  • அந்த ஆண்டு நாட்டில் 1.02 கோடிக்கும் அதிகமான உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன.
  • இது முந்தைய ஆண்டில் (2020) பதிவு செய்யப்பட்ட 81.15 லட்சம் உயிரிழப்புகளை விட 21 லட்சம் அதிகமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்