லான்செட் எனும் மருத்துவ இதழில் வெளியான அறிக்கையில், தீவிரமான கோவிட்-19 தொற்றிற்கு எதிரான தடுப்பூசியின் செயல்திறனானது மிகவும் அதிகமாக உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இந்தப் பெருந்தொற்று காலத்தில் உந்துசக்தி உடைய அல்லது பூஸ்டர் வகை தடுப்பூசியை பொது மக்களுக்கு வழங்குவது பொருத்தமானதல்ல.
இந்த மறுசீராய்வானது உலக சுகாதார அமைப்பு, அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாக அமைப்பு ஆகியவற்றின் அறிவியலாளர்களால் வழங்கப்பட்டது.
இஸ்ரேல், இத்தாலி, பிரான்சு மற்றும் ரஷ்யா போன்ற நாடுகள் கோவிட்-19 தடுப்பூசியின் 3வது தவணையினை ஏற்கனவே வழங்கத் தொடங்கியுள்ளன.