சத்தீஸ்கர் மாநிலம் முழுவதும் கைவிடப்பட்ட மற்றும் தெருவோரக் கால்நடைகளுக்காக சுமார் 1,460 தங்குமிடங்களை அமைப்பதற்கான 'கௌதாம் யோஜனா' திட்டத்தை அம்மாநில முதல்வர் தொடங்கி வைத்துள்ளார்.
இத்திட்டம் தெருவோரக் கால்நடைகளுக்கு முறையான பாதுகாப்பு, தங்குமிடம், தீவனம் மற்றும் அறிவியல் ரீதியான மேலாண்மையை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்த முன்னெடுப்பு பாரம்பரியப் பசுப் பாதுகாப்பை ஊக்குவிப்பதோடு, கால்நடை மேலாண்மை மற்றும் கிராமப்புற பொருளாதாரத்தை மேம்படுத்தவும் உதவுகிறது.