TNPSC Thervupettagam

சங்கல்ப் நடவடிக்கை

June 22 , 2019 2197 days 731 0
  • இந்தியக் கடற்படையானது பாரசீக வளைகுடா மற்றும் ஓமன் வளைகுடாவில் இந்தியக் கொடியைத் தாங்கிய கப்பல்கள் பாதுகாப்பாகச் செல்வதை உறுதிப்படுத்துவதற்காக சங்கல்ப் நடவடிக்கையைத் தொடங்கியுள்ளது.
  • நார்வே மற்றும் ஜப்பானின் இரண்டு எண்ணெய்க் கப்பல்கள் இப்பகுதியில் சமீபத்தில் தாக்கப்பட்டன.
  • ஓமன் வளைகுடாவானது அரபிக்கடல் மற்றும் இந்தியப் பெருங்கடலிருந்து பாரசீக வளைகுடாவிற்கான ஒரே நுழைவு வாயிலை வழங்குகின்றது.
  • பாரசீக வளைகுடாவானது அரேபிய தீபகற்பம் மற்றும் ஈரான் ஆகியவற்றிற்கிடையே அமைந்துள்ளது. இது ஷாத் அல் அராப் டெல்டா பகுதியிலிருந்து ஹார்மஸ் நீர்ச்சந்தி வரை பரவியுள்ளது.
  • இப்பகுதியில் INS சென்னை மற்றும் INS சுனைனா ஆகிய இந்தியக் கடற்படைக் கப்பல்கள் கடல்சார் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள இந்தப் பிராந்தியத்தில் நிறுத்தப்பட்டுள்ளன.
  • இந்தியக் கடற்படையின் இந்தியப் பெருங்கடல் பிராந்திய தகவல் இணைவு மையமானது இந்த வளைகுடாப் பிராந்தியத்தில் கப்பல்களின் நடமாட்டங்களை உன்னிப்பாகக் கண்காணிக்கின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்